Saturday 15 December 2012

பிரான்சில் அரசியல் தஞ்சம் கோருவோரை கௌரவமாக நடத்தவேண்டும்! புதிய நடைமுறைகளோடு மனுவல் வால்ஸ்!!!

பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் அவர்கள் அனைத்து நகரக் காவற்துறையின் மாவட்ட நிர்வாகத்துறைத் தலைமை மையங்களிற்கும் (Prteéfecture)  ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அரசியல் தஞ்சம் கோருவோரைக் கௌரவமாகவும் தகுதியுடனும் வரவேற்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி இந்தச் சுற்றறிக்கை அமைந்துள்ளது. அதன் பிரதி ஒன்றை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது. 
முதன்முறையாக பிரான்ஸ் அரசாங்கம் 10 தொடக்கம் 12 வீதம் வரையான நிர்வாகத் தலைமை மையங்களில் 'பெரும் சிக்கல்கள்' உள்ளது என்பதைக் கணக்கெடுத்துள்ளது. முக்கியமாக முதல் நாள் இரவே சென்று வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயங்களும் சில நிலையங்களில் அவை திறப்பதற்கு முன்னர் மூன்று தொடக்கம் நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயமும் உள்ளது என்று அந்தச் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது. முக்கியமாக Ile-de-France இல் இருக்கும் காவற்துறை மையங்கள் இப்பிரச்சினையில் அடங்குகின்றன.  Nanterre காவற்துறை நிர்வாக மையம் மட்டும் இதில் அடங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள். 
முக்கியமாக வதிவிட அனுமதியற்றோருக்கான புதிய நடைமுறை அறிமுகப் படுத்த்பட்ட பின்பு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பொபினியில் (BOBIGNY) புதிய நடைமுறை அறிவிக்கப்பட்ட பின்னர் தினமும் 300 பேரினது விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. ஆனாலும் தினமும் இங்கு 1500 பேர் வருவதாக உள்ளக அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தக் காவற்துறை மையம் என்றுமே பிரச்சினைக்குரியது. AFP தனது அறிக்கையில் நூற்றுக்ணக்கான மீற்றர்களுக்குப் பனியில் உறைந்தபடி பேச்சுக்களற்ற நிலையில் இரவிரவாக அடுத்த நாள் அலுவலக சேவை ஆரம்பிக்ப்படும் வரை மக்கள் காத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.
Seine-Saint-Denis (93) யில் நான்கு இலட்சத்து ஆறாயிரம் வெளிநாட்டவர்கள் உள்ளனர். இது Seine-Saint-Denis  யின் சனத்தொகையில் 27 சதவீதமாகும். இவர்கள் தமது இருப்பைச் சட்டபூர்வமாக வைத்திருப்பதற்குக் காவற்துறை நிர்வாக மையங்களை (Préfecture) நாடியே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களுக்கான காவற்துறை நிர்வாக மையமாக பொபினியே உள்ளது. 
"பிரான்சுவா ஒல்லோந்த் தனது தேர்தற் பிரச்சாரத்தில் 'மனித உரிமைகளின் அடிப்படையில் தகுதியானதும் மரியாதையானதுமான நிலையில் வாழ்பவர்களுக்கு வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்படும். அவர்கள் நீண்ட நெடு வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த வாக்குறுதியின் தொடரச்சியே இப்பொழுது விடப்பட்டிருக்கும் இந்தச் சுற்றறிக்கை.  ஆனாலும் இது ஒரு நீண்டகாலப் பொறிமுறையின் முதற்கட்டமே" எனவும் மனுவல் வால்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
இந் நடைமுறைகளுக்காக காவற்துறை நிர்வாக மையங்கள் தம்மை விரிவாக்கம் செய்து கொள்ள ஜனவரி 30ம் திகதி 2013ம் ஆண்டு வரை கால எல்லை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படின் சில காவற்துறை நிர்வாக மையங்களுக்கு மார்ச் நடுப்குதிவரை கூட கால அவகாசம் வழங்கப்படும். இதற்காக வெளியக வளங்களைப் பெறவும் அதற்கான செலவீனங்களை அரசு பொறுக்கவும் தாயாராக உள்ளது. 2013ம் ஆண்டிற்கான பாதீட்டில் காவற்துறை நிர்வாக மையங்கள் 7 சதவீதம் செலவீனத்தைக் கட்டுப் படுத்தவேண்டும். இருப்பினும் வெளிநாட்வர்களுக்கான பிரிவு இதற்குள் அடங்காது விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான செலவீனங்களுக்கு எந்த எல்லையும் வரையறுக்கப்படவில்லை. இதற்கான விரிவாக்கங்களை அந்த மையங்களின் தேவைப்படி காவற்துறை நிர்வாக மைய அதிகாரியே (Préfet) முடிவு செய்து கொள்ளலாம். 
உதாரணமாக ESSONE பகுதியின் காவற்துறை நிர்வாக மையப் பொதுச் செயலாளர் Alain Espinasse "நாம் ஏற்கனவே செலவீனத்தைக் கட்டுப்டுத்தி வாகனச் சான்றிதழ் (Crates grises) பதிவுப் பகுதியையும் முன்னைய வெளிநாட்டவர் பிரிவையும் இணைத்துப் பெரிய பகுதியாக்கியுள்ளோம். இது குறைந்த செலவுடன் ஆக்கபூர்வமான பலனைத் தந்துள்ளது. நாம் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது தற்காலிக வதிவிட உரிமைப் பத்திரமோ இல்லது நிரந்தர உரிமைப் பத்திரமோ தயாரான உடன் குறுஞ்செய்தி மூலம்  தெரியப்படுத்துகின்றோம். இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. 
இந்தச் சுற்றறிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்த எவ்ரி பல்கலைக் கழகத்தின் பொதுமக்கள் உரிமைக்கான கலந்தாய்வுகளின் தலைவர் Serge Slama "இந்தச் சுற்றறிக்கை ஒரு நல்ல அடையாளம். முதன்முறையாக அரசாங்கம் இப்படி ஒரு பிரச்சினை உள்து என்பதை உணர்ந்துள்ளது'" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment