தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்து வதற்கும், தமிழ் பிரதேசங்களில் ஜனநாயக உரிமைகளை பிரயோகிப் பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் தமிழரின் தேசியத்தையும் தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்குமாறு கோரி தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினர் சர்வதேச சமூகத்தை கோரியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான மனு ஒன்றில்
இலங்கையின் வடகிழக்கில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,
சமயதலைவர்கள், அரசியல் மற்றும் குடியியல் அமைப்புக்களின் பிரதிநிதிகள்
கையொப்பம் இட்டு ஐ.நா. உட்பட சர்வதேச சமூகத்திற்கு அனுப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்தினை இங்கே முழுமையாக தருகிறது.
தமிழ் அரசியல் மற்றும் குடியியல்
சமூகத்தினராகிய நாம் அண்மைக் காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண
சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில்
தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மகஜரை அனுப்பி வைக்கிறோம்.
மே 2009 இதற்க பின்னரான யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
வன்முறைகளின் சுருக்க பட்டியல் பின்வருமாறு
- ஓக்டோபர் 2011இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இராணுவ புலனாய்வு பிரிவினரால் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து 500மீற்றருக்கு உட்பட்ட சனநாடமாட்டமுள்ள பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.
- 18மே 2012 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பிலான வைபவம் ஒன்றை பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதனை குழப்புவதற்காக யாழ் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து 200மீற்றருக்கு உட்பட சனநடமாட்டம் உள்ள பிரதேசத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் தாக்கப்பட்டார்.
- 27.11.2012 அன்று 75க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை அணிந்த இராணுவத்தினரும் 50க்கும் மேற்பட்ட சீருடை அணியாத புலனாய்வு பிரிவினரும் யாழ் பல்கலைக்கழக ஆண் பெண் விடுதிகளுக்குள் புகுந்து குறிப்பாக பெண்கள் விடுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு மாணவிகளையும் மீக மோசமான முறையில் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
- 28.11.2012 அன்று 27ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அமைதியான முறையில் பல்கலைக்கழக முன்றலில் அமைதிப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது ஆயுதம் தரித்த பொலிஸாரும் இராணுவத்தினரும் மாணவர்களை தாக்கினர்.
- 29.11.2012 மற்றும் 30.11.2012 அன்று யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஒரு வாரத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்ட இராணுவ ஒட்டுக் குழுவான சிறிரெலோ அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியமை என்ற பொய் குற்றச்சாட்டின் போரில் பல்கலைக்கழக மாணவர்களான கனகசுந்தரசாமி ஜனமேஜெயந்த், சண்முகம் சொலமன், கணேசமூர்த்தி சுதர்சன், பரமலிங்கம் தர்சானந்த் ஆகியோரை பயங்கரவாத தடுப்ப விசாரணைப்பிரிவினர் கைது செய்து வவுனியாவில் இம்மகஜர் எழுதப்படும் வரை தடுத்து வைத்துள்ளனர். மேலும் பல பல்கலைக்கழக மாணவர்களையும் கடந்த காலங்களில் மாணவர் ஒன்றியங்களில் உறுப்பினர்களாக இருந்து தமது பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள பழைய மாணவர்கள் பலரையும் கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர்.
- 28.11.2012 க்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தை சென்றடைவதற்கான பிரதான வீதியான இராமநாதன் வீதியின் இரு மருங்கிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட முகமூடி அணிந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் பொலிஸாரால் எழுந்தமான முறையில் பதிவ செய்யப்பட்ட பின்னரே பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தொலைபேசியிலும் நேரடியாகவும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகதித்து வருகின்றனர். மேற்படி பட்டியல் பிரதான சம்பங்களை நிரல்படுத்துகின்றதே அன்றிn தினமும் மாணவத்தலைவர்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் அரச இயந்திரத்தால் கொடுக்கப்படும் நெருக்களை முழுமையாக பட்டியற்படுத்தப்படவில்லை. குறிப்பாக பல்கலைக்கழக ஆசிரிய சமூகத்திற்கு எதிராகவும் பல்கலைக்கழக சுயாதீனத்திற்கு எதிராகவும் அரச இயந்திரத்தால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்களை பற்றி நாம் இங்கு நீட்சி கருதி குறிப்பிடாது தவிர்த்துள்ளோம்.
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தொலைபேசியிலும் நேரடியாகவும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகதித்து வருகின்றனர். மேற்படி பட்டியல் பிரதான சம்பங்களை நிரல்படுத்துகின்றதே அன்றிn தினமும் மாணவத்தலைவர்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் அரச இயந்திரத்தால் கொடுக்கப்படும் நெருக்களை முழுமையாக பட்டியற்படுத்தப்படவில்லை. குறிப்பாக பல்கலைக்கழக ஆசிரிய சமூகத்திற்கு எதிராகவும் பல்கலைக்கழக சுயாதீனத்திற்கு எதிராகவும் அரச இயந்திரத்தால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்களை பற்றி நாம் இங்கு நீட்சி கருதி குறிப்பிடாது தவிர்த்துள்ளோம்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமானது தமிழ்
தேசிய உரிமைப் போராட்டத்திற்கு அதன் ஆரம்ப காலப் பகுதியிலிருந்தே மிகத்
காத்திரமான பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியலை
வழிப்படுத்துவதில் புமைத்துவ பங்களிப்பையம் செயல்சார் பங்களிப்பையும் யாழ்
பல்கலைக்கழக ஆசியர் மற்றும் மாணவ சமூகம் தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளது.
இத்தகைய பங்களிப்பை இல்லாமல் செய்யும்
நோக்கில் காலத்திற்கு காலம் அரச இயந்திரம் முயற்சி செய்து வந்துள்ளது. அதன்
அங்கமாகவே போருக்கு பின்னரான சூழலில் தொடர்ச்சியாக இச் சமூகத்திற்கு
எதிராக தொடுக்கப்படும் வன்முறைகள் நோக்கப்பட வேண்டும்
போருக்கு பின்னரான சூழலில் தொடரும் சனநாயக
மறுப்பாக இவ்வன்முறைகளும் அச்சுறுத்தல்களம் பார்க்கப்படுவதற்கு அப்பால்
தமிழ் தேசிய இருப்பைத் தொடர்ச்சியாக ஆழிக்கும் செயற்திட்டத்தின் ஒர்
அங்கமாகவே அமைகின்றன.
இறந்தவர்களை நினைவு கூருவதற்கான உரிமை,
பேச்சுஉரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை போன்ற உரிமைகள் மறுக்கப்பவதற்கு
இச்சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன என்பதோடு தமிழர்கள் தனித்துவமான
அரசியல் முன்னெடுப்பை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே அரச இயந்திரம்
யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் செயற்பட்டு வருகிறது என நாம் கருகிறோம்.
இதனை சர்வதேச சமூகம் விளங்கி கொள்ள வேண்டும்.
இலங்கை தொடர்பாக இன்றைவரை சர்வதேச சமூகம்
எடுத்துள்ள நிலைப்பாடானது தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுடைய வாழ்வில்
எத்தகைய காத்திரமான பங்களிப்பையும் செய்யவில்லை என்பதை மிகுந்த
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். யுத்தத்தின் போது தமிழர்கள்
அழிக்கப்படுவதை பார்த்திருந்த சர்வதேச சமூகம் தற்போதும் எமது தேசத்திற்கு
எதிரான கொடுமைகளை பார்த்து வாளாதிருப்பது சர்வதேச சமூகத்தின் மீதான
நம்பத்தன்மையை மேலும் பாதிப்பதாக இருக்கிறது.
தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகம்
No comments:
Post a Comment