Wednesday 27 February 2013

லண்டனிலிருந்து நாளை நாடு கடத்தவுள்ள இலங்கை அகதிகளின் விமானத்தை நிறுத்தும் முயற்சியில் சனல் 4


பிரித்தானியாவில் புகலிடம் கோரிய 65 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..

நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை அனுப்பாமல் இருக்க வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இவர்கள் மீள் இலங்கை செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் சனல் 4 களம் இறங்கியுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

தாம் வெளியிட்ட இலங்கையின் குற்றங்கள் மனித உரிமைகள், பாலியல் குற்றங்கள் என்பனவற்றை அவை ஆதாரமாக வைத்துள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment