Thursday 28 February 2013

நெதர்லாந்தில் தமிழர் வீடுகளில் கொள்ளை


நெதர்லாந்து நாட்டில் -பிறேடா.எற்றன் லூர் பகுதிகளில் உள்ள தமிழர் வீடுகளை இலக்கு வைத்து தமிழ் .மற்றும் அவர்கள் வழி நடத்த படும் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விதம் அருகருகில் உள்ள இரு தமிழர்களின் வீடுகளின் கதவுகள் உடைக்க பட்டு விலை மதிக்க தக்க பொருட்கள் கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளன.

இதில் ஒரு வீட்டில் நகைகள் .விலை மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையிட பட்டுள்ளன என தெரிவிக்க படுகிறது.

ஆனால் மறு வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வித்தியாசமான திருட்டை
செய்துள்ளனர்

அதவாது அவருக்கு வந்த கடிதங்களையும் திருடி சென்றுள்ளனர்
அதேவேளை மறுநாளும் அவர்கள் வீட்டுக்குள் பின் யன்னல் வழியாக புகுந்து வீட்டுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்

இந்த விடயம் தொடர்பாக காவல்துறையில் சென்று முறையிட பட்டுள்ளதுடன் இருவர் மீது சந்தேகம் கொண்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது

இவர்களின் வீட்டுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தமிழர்கள் எனவே
குறித்த வீட்டு உரிமையாளர்கள் சந்தேகிக்கின்றனர்

கொள்ளையர் வீட்டு முன் கதவு வழியாக உடைத்து உள்ளே நுழைந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற விடயங்கள் தெரிவிக்க பட்டன

இந்த வீட்டுக்குள் இருந்த இதர விலை உயர்ந்த பொருட்களும் திருட பட்டுள்ளதுடன் குறித்த வீட்டினை தீ வைத்து கொளுத்தும் முயற்சியில் இந்த திருடர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது.

குறித்த விடயங்கள் யாவும் உரியவர்களிடம் முறையிடபட்டுள்ளது.

தொடர்ந்து சந்தேகிக்க படும் நபர்கள் கண்காணிக்க படுகின்றனர்
அத்துடன் பொலிசார அயலவர்களிடம் சென்று விசாரிதுள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் குறித்த திருடர்கள் மடக்கி பிடிக்க படுவார்கள் என ஏதிர்பார்க்க படுகின்றது அயலவர்களிடம் குறித்த வீட்டு உரிமையாளரை தவிர பிற நபர்கள் நடமாடினால் உடனடியாக பொலிசாருக்கோ அன்றி வீட்டு உரிமையாளருக்கோ தெரிவிக்கும் படி அறிவிறுத்த பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment