Tuesday 26 February 2013

தற்கொலைக்கு முயன்ற புலிகளின் மூத்த தளபதி வீமனின் தயார் மரணம்


 காணாமல் போனரது நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளித்தெரியாத நிலையில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது தற்கொலை வீதம் என்றுமில்லாத அளிவில் அதிகரித்துச் செல்கின்றது.

18 ஆம் திகதி  அதிகாலை அவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த விடுதலைப்புலிகளது மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிர் இழந்தார்.

இதனிடையே குறித்த முன்னாள் போராளிகளது குடும்பத்தவர்கள் மீது இலங்கை படையினர் மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்கள் முன்னெடுத்துவரும் சித்திரவதைகள் மற்றும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நிகழ்வுகளும் இத்தகைய தற்கொலைக்கு காரணமென நம்பப்படுகின்றது. இத்தகைய அச்சுறுத்தல்களாலேயே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் காரணமாகிவிடுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

யுத்தகாலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கடந்த ஆண்டினில் இலங்கையின் தற்கொலைவீதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment