Tuesday 26 February 2013

பவர் ஸ்டாரின் முத்தத்ததால் கோபமடைந்த நடிகை!


அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். 
 
நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார்.
 
 நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளுடன் இரவுப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார் சீனிவாசன். 
 
ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சீனிவாசன், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, உடன் ஆடிய அழகி ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார். பல் பட்டுவிட்டதோ என்னமோ.. அந்த நடிகை ஏக கோபத்துடன் சத்தமில்லாமல் திட்டிக் கொண்டே, இன்னொரு முறை இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தார். 
 
ஆனால் பவரோ இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. சிரித்துக் கொண்டே, அதே பெண்ணின் மீது கைபோட்டபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். 
 
முதலில் உர்ரென்றிருந்த அந்தப் பெண், பின்னர் சகஜமாகி சீனிவாசன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்!

No comments:

Post a Comment