Thursday 7 February 2013

ஆரம்ப பாடசாலை மாணவி மீது (ஈ.பி.டி.பியின்) காமுக காவலாளி பாலியல் பலாத்காரம்

யாழ். நகரின் பிரபல ஆரம்ப பாடசாலையான சென். ஜோன் பொஸ்கோவில் கல்வி கற்கும் மாணவி அப்பாடசாலை காவலாளியாக கடமையாற்றும் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் என்றும் இவர் ஈ.பி.டி.பியின் சிபார்சின் பேரிலேயே காவலாளியாக நியமிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காவலாளி யாழ். மாநகர சபை ஈபிடிபி உறுப்பினர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர். இதன்காரணமாக இக்குற்றத்தை மூடிமறைத்து அமுக்கிவிட பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  அதிலும் காமுகக் காவலாளியைத் தாக்கிய பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களுக்கு ஈ.பி.டி.பியினர் வீடுசென்று மிரட்டல் விட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காமுக காவலாளி மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வேலைகளுக்கு யாழ். மாநகர முதல்வர் திருமதி பற்குணமும் உடந்தையாக இருக்கிறார் என தெரியவருகிறது. இது தொடர்பாக எங்கும் முறைப்பாடு செய்யக் கூடாது என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.

தனது பேத்தி வயதான சிறுமியை பாசத்துடன் அரவணைத்ததை பெரிதுபடுத்தி விடாதீர்கள் என ஈ,பி.டிபியினரும் அக்கட்சியின் மாநகர முதல்வரும் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment