Wednesday 6 February 2013

இலங்கைப் பெண் இத்தாலியில் கற்பழிப்பு!


இத்தாலியின் மிலானோ நகரத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு உள்ளார். வட ஆபிரிக்கர் ஒருவரே இக்கற்பழிப்பை மேற்கொண்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 38. அலுவலக வேலையை முடித்து விட்டு திரும்பிய இவர் பஸ்ஸில் ஏறுகின்றமைக்காக காத்திருந்த போதே காமுகனின் கண்களில் பட்டிருக்கின்றார்.

இவர் ஒதுக்குப் புற வீதி ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டு கெடுக்கப்பட்டு உள்ளார் என்று இத்தாலிப் பொலிஸார் தெரிவித்து உள்ளனர். இவர் உதவி கேட்டு அழுது இருக்கின்றார் என்றும் எவரும் உதவ முன் வந்து இருக்கவில்லை என்றும் இச்செய்திகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment