Thursday 7 February 2013

பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதல்! ஹத்துருசிங்கவே பெறுப்பை ஏற்கவேண்டும்! சரவணபவன் எம்.பி


பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

யாழ். பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த சி.சிவகுமார் என்பவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டதுடன், அவர் கொண்டு சென்ற பத்திரிகையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார்.


விநியோகப் பணியாளர் தனது உடலில் ஏற்பட்ட காயங்களையும், தான் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு காயமடைந்தமையினால் தமது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தினார்.

எம்.பொ. சரவணபவன் தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
யாழில் அடாவடி அரசியல் நடத்திக்கோண்டிருக்கும் ஒரு கட்சி அவர்களுடைய பத்திரிகையை மக்களிடையே திணிப்பதற்காக தினக்குரல் பத்திரிகையை முடக்குவதற்காக இவ்வாறு விநியோக்கதர்கள் மீது தாக்குதலை நடாத்தியுள்ளனர் என சந்தேகிக்கக்கூடியதாக இருக்கின்றது எனவும் சரவணபவன் எம்பி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment