Monday 4 March 2013

நாடு கடந்த தமிழ்ஈழ அரசின் ஏற்பாட்டில் நடைபயணம் மேற்கொண்டதால் மதிப்பளிக்கத் தவறிய ஜெனிவா ஏற்பாட்டாளர்கள்


கடந்த 13 நாட்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து நடைப்பயணத்தை ஆரம்பித்த தமிழ் உணர்வாளர் சத்தி இன்று ஜெனிவா முன்றலை சென்றடைந்தார்.

தமிழருக்கு நீதி கோரி நடைப்பயணத்தை மேற்கொண்ட சத்தி இன்று ஜெனிவாவில் பேரணி நடைபெற்ற முன்றலை சென்றடைந்த போதும் அவரின் தியாகத்திற்கு மதிப்பளிக்க பேரணி ஏற்பாட்டாளர்கள் தவறிவிட்டதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

இவர் நாடு கடந்த தமிழ்ஈழ அரசின் ஏற்பாட்டில் நடைபயணம் மேற்கொண்டதால் இவருக்கு இந்த நிலைமை  வந்திருக்கலாம் என பேரணியில் கலந்து கொண்ட  மக்கள் தெரிவித்தனர்.   

எனினும் ஜெனிவாவில் உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் சத்தியை வரவேற்று அவருக்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.


No comments:

Post a Comment