Tuesday 5 March 2013

அகதி தஞ்சம் நிராகரித்ததால் நபர் தீ குளிப்பு -நெதர்லாந்தில் சம்பவம்

நெதர்லாந்தின் உர்த்ரிச் பகுதியில் உள்ள அகதி முகாம்
ஒன்றில் தங்கி இருந்த ஈராக் நாட்டை சேர்ந்த அகதி ஒருவர் அந்த நாட்டு அரசு
தனது அகதி அந்தஸ்து கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து
தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய நேற்று முயன்றுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நபர்களினால
அவரது தீ அணைக்க பட்டு தற்போது ஆபத்தான தீ எரி
காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

தன்னை மீள தனது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என கோரியே இந்த
பரிதாப நிலைக்கு அவர் உள்ளாகியுள்ளார்

No comments:

Post a Comment