வத்திக்கானில் புதிய பாப்பரசருக்கான தெரிவு முடிவுகளை அறிவிப்பதற்காக புதிய புகைபோக்கி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தொடர்ச்சியான வாக்கெடுப்புக்கள் ரகசியமாக நடத்தப்படும்.
பாரம்பரிய நடைமுறைகளின்படி இதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட புகை போக்கிகளில், ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பு முடிந்ததும், அந்தந்த வாக்குச் சீட்டுக்கள் போட்டு எரிக்கப்படும்.
முடிவுகள் எதுவும் வராத பட்சத்தில் அதனை அறிவிக்க இரசாயனம் கலந்து கறுப்பு புகை வெளியேற்றப்படும்.
முடிவு தெரிந்தால், அதனை அறிவிக்க வெள்ளை நிறப்புகை வெளியாகும்.
அதன் பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசர் மக்கள் முன்பாக தோன்றுவார்.
No comments:
Post a Comment