இலங்கையில் தமிழ் ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து சிறிலங்கா அரசின் ஊடகங்களையும் சிறிலங்கா அரசின் அடிவருடி ஊடகங்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
இருந்து வெளிவரும் சிறிலங்கா அடிவருடி ஊடகமான டான் தொலைக்காட்சி,
ஈ.பி.டி.பியின் தினமுரசு, உட்பட அரச ஊடகங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள்
தங்கள் வீடுகளிலிருந்து முற்றாக புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்
மக்கள் டான் தொலைக்காட்சி போன்ற தமிழின விரோத தொலைக்காட்சிகளை பார்ப்பதை
நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்கா அரசின் அடிவருடி
தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியை சுவிஸில் டெக் மூலம் விடுதலைப்புலிகள்
அமைப்பே விற்பனை செய்து வருகிறது. டான் தொலைக்காட்சியை பார்க்கும்
டெக்குகளை விடுதலைப்புலிகள் அமைப்பு மாவீரர்நாள் நிகழ்ச்சியின் போது
விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment