Thursday 14 November 2013

கடற்படை முகாமில் தமிழ்ப்பெண் மீது பாலியல் சித்திரவதை

சிறிலங்காப் படையினரின் சித்திரவதையிலிருந்து தப்பி அகதித்தஞ்சம் கோரிய ஒருவரின் மனைவி வடக்கில் உள்ள கடற்படை முகாம் ஒன்றில் பல தடவை பாலியல் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான காணொலி ஆதாரத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றுவருகின்ற நிலையில் சனல் 4 அடுத்தடுத்து காணொலித் தொகுப்புக்களை வெளியிட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் காணொலியும் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.