Thursday 14 November 2013

கடற்படை முகாமில் தமிழ்ப்பெண் மீது பாலியல் சித்திரவதை

சிறிலங்காப் படையினரின் சித்திரவதையிலிருந்து தப்பி அகதித்தஞ்சம் கோரிய ஒருவரின் மனைவி வடக்கில் உள்ள கடற்படை முகாம் ஒன்றில் பல தடவை பாலியல் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான காணொலி ஆதாரத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றுவருகின்ற நிலையில் சனல் 4 அடுத்தடுத்து காணொலித் தொகுப்புக்களை வெளியிட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் காணொலியும் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday 29 October 2013

லண்டனில் இலங்கைச் சிங்கள இளைஞர் ஒருவர் கொலை!


இலங்கையில் இருந்து லண்டன் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய சென்ற 25 வயதான தவிஷ பீரிஸ் என்ற இந்த இளைஞர், தென் யோக்சயார் என்ற இடத்தில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2011ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற  தவிஷ பீரிஸ் செபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் சொப்ட்வெயார் எஞ்சினியரிங் துறையில் கல்வி கற்றுவந்தார்.

இதேவேளை தமது படிப்புக்கும் இலங்கையில் உள்ள தமது குடும்பத்துக்கும் தேவையான பணத்தை உழைப்பதற்காக பீசா உணவகம் ஒன்றில் விநியோகப் பையனாகவும் அவர் தொழில் செய்து வந்தார் என்று யோக்சயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஆடைகளை கொள்வனவு செய்திட FASHIONTAMIL

தாயக மீட்புக்காக ஆயுதக் கொள்வனவு செய்த சுரேசுக்கு கனடாவில் 2 வருட சிறை

 

அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும் 33 வயதான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா 2006 ம் ஆண்டு கனடாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராசாவும் மேலும் மூவரும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தனர் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுரேஸ் அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு 2012ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதன்போது தாம் விடுதலைப் புலிகளுக்காக வானூர்தி உபகரணங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், இரவு நேர வெளிச்சம் பாய்ச்சி மற்றும் தொலைத்தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் உதவியதாக சுரேஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

Waterloo Suresh என்று அழைக்கப்படும் கனடிய தமிழர், விடுதலைப் புலிகளுக்கு இராணுவ மென்பொருட்களை வாங்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2006 ஆகட்ஸ் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டு 6 வருட சட்ட போராட்டங்களின் பின் கடந்த டிசம்பர் மாசம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

அவருக்கு நேற்று New York நீதி மன்றத்தில் 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரச சட்டத்தரணிகள் அவருக்கு அதிகபட்ச தண்டனையான 15 வருடங்களை வழங்குமாறு கேட்டிருந்தனர்.

சுரேஸ் அவர்களின் சட்டத்தரணி அவருக்கு ஆதராவதாக பல அரச, சமூக, தொழில் துறை சார்ந்த புத்திஜீவிகளின் ஆதரவு கடிதங்களையும் மேற்கோள் காட்டி குறிப்பாக Craig Scott என்ற கனடிய M.P சுரேஸை கனடிய தமிழர்களுக்கும் மற்றும் கனடிய குடியேற்ற வாசிகளுக்கும் இவர் ஓர் முன்னுதாரணமானவர் என்றும், மற்றும் கல்வியிலும் Engineering, Business Studies, மற்றும் Arts துறைகளில் மிகத் திறமையானவர் என்றும் பின்பு சட்டத்துறை படிப்பினையும் மேற்கொண்டிருந்தார் என்று அவர் அக்கடித்தத்தில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு அமெரிக்காவில் சிறையிலிருந்த நிலையிலும் அங்கு கைதிகளுக்கு கல்வி கற்பித்தலில் மிகச் சிறப்பாக செயலாற்றினார். இது போன்ற செயல்களால் மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் மிகச்சிறப்பான மனமுடையவர் என்றும் கூறப்பட்டது.

இவரின் தண்டனைக் காலம் இதுவரை கனடாவிலும் அமெரிக்காவிலும் சிறையிலிருந்த காலங்கள் கணக்கில் எடுக்கப்படும் என அறியப்படுகின்றது.

Thursday 24 October 2013

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது; இடித்துரைத்தது பி. பி. சி

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? இதோ BBC நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை(புதன்கிழமை) வெளியாகியுள்ளது. 

இலங்கையில் இளைஞர்களும் பெண்களும் இன்னமும் சித்திரவதைகளுக்கும் , பாலியல் துண்புறுத்தலுக்கும் ஆளாகிவருகிறார்கள் என்பதனை இந்த ஆவணப்படம் வெளிவாக எடுத்து காட்டுகிறது. 4 நிமிட நேரத்தில், இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்பதனை BBC வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. 

இதில் ஒரு பெண் தன்னை இலங்கை இராணுவத்தினர் மாறி மாறி கற்பழித்ததாக கூறியுள்ளார். இதனால் தான் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதோடு, அதற்கான மாத்திரைகளையும் எடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆண் ஒருவர் தனது சாட்சியத்தையும் இங்கே பதிவுசெய்துள்ளார். தன்னை சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவம் கைதுசெய்தது என்றும், தன்னை சொல்லொனா சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


தன்னை சிறையில் வைத்து விசாரிக்கும்போது ஒவ்வொரு கேள்விகளைக் கேட்க்கும்போதும், தனது ஆண் குறியை இலங்கை இராணுவம் கசக்கி தன்னை துண்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே தமது முகத்தை காட்ட மறுத்துவிட்டபோதும், BBC இதனை ஆவணப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள இன் நிலையில், பல ஆதாரங்கள் இலங்கைக்கு எதிராக வெளியாகியவண்ணம் உள்ளது. இது இலங்கை அரசின் மேல் பல அழுத்தங்களை பிரியோகித்தவண்ணம் உள்ளது. 

Tuesday 22 October 2013

பீரிசிற்கு எதிராக பிரித்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்


பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.


ஜீ. எல் பீரிஸின் லண்டன்  வருகையை எதிர்த்தும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் பெருமளவிலான தமிழர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

Monday 21 October 2013

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!


பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saturday 19 October 2013

பூசாவில் தடுப்புக்காவலில் இருக்கும் இளைஞரின் குடும்பத்தினர் மீண்டும் சுவிஸ் திரும்பினர்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், கைதுகளும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவது தொடர்ச்சியாக நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள்  தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட குடும்பம் ஒன்றின் குடும்பத்தலைவன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கையைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை அகிலரூபன் அவரது கர்ப்பிணி மனைவியான சாளினி மற்றும் இவர்களது பிள்ளைகளான தமிழவன் (4 வயது), ஓவியா (3 வயது) ஆகியோர் 21.08.2013 அன்று சுவிஸ் அரசாங்கத்தினால் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். 28.08.2013 அன்று இலங்கை விமான நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் விமானநிலையத்தில் 13 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர், அகிலரூபன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மனைவியும், இரண்டு குழந்தைகளும் சுவிஸ் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதையடுத்து 14.08.2013 அன்று மீண்டும் சுவிற்சர்லாந்து திரும்பியுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது செங்காளன் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு சூரிச் மாநிலத்தில் தங்கள் உறவினர்களுக்கு அண்மையில் தங்க வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரைப்போன்று, ஜூலை 12 ஆம் திகதி திருப்பியனுப்பப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் பலத்த சித்திரவதைகளுக்கும், அடிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக இவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இவ்விரு கைதிகளினதும் தகவல்கள் மற்றும் உடல்நிலை பற்றிய தகவல்களைப் பெற சுவிஸ் தூதரகம், யு.என.;எச்.சி. ஆருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுவிஸ் அகதிகள் அதிகார சபையின் இயக்குனர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அகதிகள் தற்போதைக்குத் திருப்பியனுப்பப்படமாட்டார்கள். எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை தான். நாட்டிற்குத் திருப்பியனுப்பக் காத்திருக்கும் 140 இலங்கையரையும் யு.என்.எச்.சி.ஆர் மூலம் தஞ்ச நடைமுறையின் கீழ் வெளிப்புற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவர்கள் தாங்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என முன்னரே சுவிஸ் அதிகாரிகளிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் திருப்பியனுப்பப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவிக்கையில், தனது வாடிக்கையாளர் ஏற்கனவே இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமையால் தலையில் ஏற்பட்ட காயங்கள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். அவர் விடுதலையாக கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

சுவிஸ் அகதிகள் சபையின் 2011 கோடை கால அறிக்கையின் பிரகாரம், மத்திய நிர்வாக நீதிமன்றத்தினால் தமிழர்களுக்குத் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை நியாயமான என்பதை வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து மட்டுமே தற்பொழுது திருப்பியனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது. எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றார்.

கைது செய்யப்பட்ட இருவரும் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Wednesday 9 October 2013

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சத்தி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் CTV நிறுவனம்


500 புகலிடக் கோரிக்கையாளர்களை கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக CTV நிறுவன ஆவண செய்தியில் சுட்டிக்  காட்டப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டதன் பின் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சுமார் ஒரு வருடகாலம் தான் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சத்தி எனப்படும் சத்தியபவன் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். 

பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்ததாக பாதிக்கப்பட்ட சத்தியபவன் ஆசீர்வாதம் தனது கனேடிய சட்டத்தரணியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

'என் உடலில் தண்ணீர் தாகம் ஏற்பட்டு நான் தண்ணீர் கேட்டபோது அவர்கள் என்னை அடித்தனர், எனது கண்ணை கட்டி கைகளையும் கட்டி போட்டனர், நிர்வாணமாக்கப்பட்டேன், குளிர்ந்த, இருண்ட அறையில் அடைக்கப்பட்டேன். அந்த நாட்களை என்னால் எண்ண முடியவில்லை.' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் சத்தி அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்; 500 புகலிடக் கோரிக்கையாளர்கள் சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தனர். 

இவர்களை சட்டத்துக்கு புறம்பாக கனடாவுக்குள் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் சத்தி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இலங்கை சிறையில் வைத்து சத்தியபவன் ஆசீர்வாதம் மீது சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday 7 October 2013

தமிழர் அரசுக்காக அரியணை ஏறும் நாள் இன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையோடு ஈழத்தமிழ் அரசின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்க, வாழ்வு சிறக்க இந்த வேளையில் நாம் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
பொதுவில் எந்த ஆரம்பக் கருமங்களுக்கும் விநாயகராகிய விக்னேஸ்வரப் பெருமானை வழிபாடாற்றி கருமங்களைத் தொடங்குவதே வழமை.

அந்த வகையில் வடக்கு மாகாண சபையின் முதலாவது தமிழ் அரசுக்கு விநாயகப் பெருமானின் நாமத்தைக் குறிக்கும் விக்னேஸ்வரனே முதலமைச்சர் என்ற அரியணையில் அமர்வது சாலப் பொருத்தமுடையது.
இந்த நாட்டின் உச்ச நீதிமன்றின் நீதியரசராக இருந்த ஒருவர் வடக்கு மாகாண தமிழ் அரசின் அரசராக இன்று அரியணை ஏறுவது தமிழர்களின் தகை சான்ற பெருமையை பறைசாற்றுவதாகும்.

உன்னதமான நீதியரசர். எல்லா இனங்களையும் எல்லா சமயங்களையும் மதிக்கின்ற ஒரு பேரறிஞர்.

எந்தக் கட்சியும் அரசியலும் சாராத ஒப்புரவாளருக்கு தமிழ் மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளை வாரி வழங்கி அவரை தமிழர்களின் ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.

இது தமிழ் மக்களின் நீதி நெறி தவறாத சால்புடமைக்கும் அறிவுடமைக்கும் தக்க சான்றாகும்.

அதேநேரம் வடக்கு மாகாண சபை என்பதைத் தான் நாம் தேடிக் கண்டோமா? என்று கேட்பதிலும் நியாயமிருக்கவே செய்யும்.

ஒரு காலத்தில் எங்கள் கையில் வடக்கும் கிழக்கும் இணைந்த அரசு கிடைத்ததல்லவா! அதைக் கைவிட்டுவிட்டு இப்போது வடக்கு மாகாணசபை தமிழர்களின் அரசு என்று நீங்கள் கூறுவது சரியானதா? என்று உங்களில் யாரேனும் ஆதங்கம் கொண்டால் அதுவும் ஏற்புடையதே.

எனினும், என்ன செய்வது! கால சூழ்நிலைகள், சர்வதேச மாற்றங்கள், எங்களுக்குள் இருந்த ஒற்றுமையீனங்கள் கூடவே நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த கர்மவினைப்பயன்கள் என எல்லாமும் சேர்ந்து எங்களை வஞ்சித்துவிட்டன.

இதனால், வாழவேண்டிய எத்தனையோ எங்கள் உறவுகளை நாம் பறிகொடுத்து விட்டோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டுக் கதறிய அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுவார் யாரு மின்றி இழந்து விட்டோம். இந்தத் துயரம் சாதாரணமானதல்ல. இந்தத் துன்பமான வரலாற்றை எங்கள் இதயங்களில் சுமந்து கொள்கிறோம்.

அதேநேரம், வடக்கு மாகாண அரசு என்பதில் இருந்து எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்வதே சமகால சர்வதேச சூழமைவுக்கு ஏற்புடையதாகும்.

உலக நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை அரசின் இனச்சார்புடமையை நன்கு விளங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று அவகாசம் கொடுத்து எச்சரித்திருக்கும் போது நாங்களும் கிடைத்த ஆசனக்கல்லில் அமர்ந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
ஆசனம் கருங்கல்லா, பவளக்கல்லா, சிம்மாசனமா என்பதல்ல கேள்வி.
ஆசனத்திலிருந்து செய்கின்ற கடும் தவமே எங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரும் வேள்வி.

இந்த வேள்வியை ஒற்றுமை என்னும் நெய்யூற்றி அனைவரும் வளர்ப்போம்.
அது நிச்சயம் எங்களுக்கு பேரொளி ஆகும்.

Sunday 6 October 2013

தடுப்பிலுள்ள இரு தமிழர்களை சந்திக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு சிறிலங்கா அனுமதி

சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறிலங்காவில் கைது செய்யப்பட்ட இருவரையும், பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.  

குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டிப் பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   கடந்த 2011ம் ஆண்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இரு தமிழர்களை சுவிற்சர்லாந்து திருப்பி அனுப்பியிருந்தது. 

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   இதையடுத்தே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதை, சுவிஸ் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 26ம் நாள், இடைநிறுத்தியது. 

 இந்தநிலையில், தற்போதும் சிறிலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழர்களையும், சுவிஸ் அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட இருவரினதும், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி நடராஜா, தினக்குரல் ரவிவர்மா - இலங்கையின் இரு பிரபல ஊடகவியலாளர்கள் மறைவு

வீரகேசரி நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியர், எஸ்.நடராஜாவும், தினக்குரல் நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ரவிவர்மாவும், நேற்று காலமாகினர். 

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா, 1950களில் ஊடகத்துறைக்குள் நுழைந்து, நான்கு பத்தாண்டுகளாக வீரகேசரி ஆசிரியபீடத்தில் பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்தவராவார்.

இவர் 1997ம் ஆண்டு தொடக்கம், 2005ம் ஆண்டு வரை- வீரகேசரியின் பிரதம ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். 

வாயாடி, குருவி போன்ற புனைபெயர்களில் வெளியான இவரது பத்திகள் மிகவும் பிரபலமானவையாகும். 

அதேவேளை, தினக்குரல் நாளிதழில் உதவிஆசிரியராக பணியாற்றிய, ரவிவர்மாவும் நேற்று சுகவீனம் காரணமாக காலமானார்.

இவர், நீண்டகாலமாக தினக்குரல் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய இவர், சிறந்த அரசியல் கட்டுரைகள், பத்திகளையும் எழுதி வந்தவர். 

கடந்த சில ஆண்டுகளாக இவர் சுகவீனமுற்றிருந்தார். 

மூத்த ஊடகவியலாளர் எஸ்.நடராஜா மற்றும் ரவிவர்மா ஆகியோரின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். 

சூடான் ஜனாதிபதியின் நிலை இலங்கைக்கும் ஏற்படுமா?


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் நிகழ்த்திய உரை குறித்து, அமெரிக்காவின் பிரபலமான லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தக் கட்டுரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்தமுறையும் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருவாரேயானால் அதிகளவில் அசௌகரியமான வரவேற்பை பெறக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார் அதை எழுதிய சசாங் பெங்காலி.

ஐநா பொதுச்சபைக் கூட்டங்களில் முன்னரெல்லாம் லிபிய அதிபர் கடாபி, ஈரானிய அதிபர் மஹ்மூட் அகமட்நிஜாட் போன்றவர்கள் ஐநாவையும் மேற்குலகையும் அதிகம் விமர்சிப்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.
இப்போது அவர்கள் யாரும் பதவியில் இல்லை.

கடாபி மரணமாகிவிட்டார். ஈரானிய அதிபராக இருந்த அகமட்நிஜாட் பதவியை விட்டு விலகிவிட்டார்.

இந்தநிலையில் பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் ஐநாவைப் பற்றியும் மேற்குலகைப்பற்றியும் சூசகமான முறையில் விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மனித உரிமை, ஜனநாயகம் போன்ற ஆயுதங்களை வைத்து சிறிய நாடுகளை வல்லமை மிக்க நாடுகள் துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்து இலங்கை மீதாக அமெரிக்காவினதும், மேற்குலகினதும் அழுத்தங்களின் வெளிப்பாடுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சிறிய நாடான இலங்கை மீது மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்களைப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம் அதிகளவு அழுத்தங்களைக் கொடுக்கிறது என்பது இலங்கை அரசாங்கத்தினது கருத்தாக உள்ளது.

ஆனால் சர்வதேச சமூகத்தினது பார்வையில் குறிப்பாக மேற்குலகின் பார்வையில் இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடாக எதேச்சதிகார நாடாகப் பார்க்கப்படுகிறது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்தை இந்த நாடுகள் பெரும்பாலும் ஏற்கின்ற நிலையில் இருக்கின்றன.

எதேச்சதிகாரப் போக்கில் செல்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தாம் பதவிக்கு வந்த பின்னர் எத்தனை தேர்தல்களை நடத்தியிருக்கிறோம் என்று கணக்குக் காட்டியிருக்கிறது.

ஆனால் தேர்தல் மூலமான தெரிவு என்பது முற்றிலும் ஜனநாயக சூழலைப் பிரதிபலிப்பதாக அர்த்தமில்லை என்பதே மேற்குலகின் வாதம்.

ஏனென்றால் பல தசாப்தங்களாக ஆட்சயைத் தம் கைக்குள் வைத்திருந்த பல சர்வாதிகாரிகள் தேர்தலைத் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் ஸிம்பாப்வே அதிபர் ரொபர்ட் முகாபே அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 7வது தடவையாக வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் அங்கு மோசமான மனித உரிமை மீறல்கள் நடப்பதும், அவரது ஆட்சி சர்வாதிகாரப் போக்கு கொண்டது என்பதும் வெளிப்படையான உண்மைகள்.
ஆனாலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஆட்சியிலிருப்பவர்கள் எல்லாவற்றையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு பிறர் வெற்றி பெற முடியாதளவுக்கு தேர்தலில் செல்வாக்கு செலுத்துபவராக இருக்க வேண்டும்.

அல்லது வலுவான எதிர்க்கட்சியோ வேட்பாளரோ இல்லாதிருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இவற்றில் எந்தச் சூழல் உள்ளது என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை.

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து, தேர்தலில் வெற்றி கொள்வது எத்தகைய சிரமமான காரியம் என்பதை உலகம் ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்றால் அண்மையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தது போன்று பெருமளவு மக்கள் துணிச்சலோடும் எழுச்சியோடும் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
போர் வெற்றி மாயை என்ற தெற்கிலுள்ள மக்களின் பலவீனத்தை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதை உலகம் அவ்வளவாக சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

அதனால்தான் நவநீதம்பிள்ளையின் வாயில் இருந்து எதேச்சதிகாரப் போக்கு பற்றிய கருத்து வெளியானது.

அதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை அவர் சமர்ப்பிக்கப் போகிறார்.

அவரது வாய்மூல அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி வரும் 2014 மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தனியான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் அதிகாரத்தை நவநீதம்பிள்ளை கொண்டிருக்காது போனாலும் சர்வதேச சமூகத்தின் துணையுடன் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார்.

அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா ஒன்றுக்கு இரண்டு முறை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது.

ஆக வரும் மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லாது போனாலும் சர்வதேசப் பொறிமுறையைத் தவிர்ப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபட அது தயாராக இல்லை.

இத்தகையதொரு சூழலில் தான் லொஸ்ஏங்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை கடாபி, அஹமட்நிஜாட் போன்றவர்களையும் நினைவுபடுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பற்றிய கட்டுரையை வரைந்துள்ளது.

அதுமட்டுமன்றி டார்பூர் பிராந்தியத்தில் இனப்படுகொலை மற்றும் பிற குறறங்களில் ஈடுபட்டதற்காக அனைத்துலக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடானிய அதிபர் ஒமர் ஹசன் அகமட் பஷிரையும் தொடர்புபடுத்தி இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

சூடானிய அதிபர் பஷீர் இம்முறை ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

காரணம் அவர் மீதான போர்க்குற்ற விசாரணை தான்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறத் தவறினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புத் தான், அடுத்தமுறை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு வருவாரேயானால் அசௌகரியமான வரவேற்பை சந்திக்க நேரலாம் என்று லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டதற்குக் காரணம்.

இது இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்ற கருத்தையே பிரதிபலிக்கிறது.

Wednesday 24 April 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த தமிழ் இளைஞன் மீது இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சித்திரவதை


 அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஏபிசி என்ற ஊடகத்திற்கு 7.30 செய்திக்கு அழைப்பை ஏற்படுத்திய இலங்கை பிரஜையான குமார் என்பவர் தனக்கு நடந்த துன்பத்தை கூறியுள்ளார்.

குமார் குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தேன். இலங்கையிலுள்ள எனது உறவினருக்கு சுகவீனம் ஏற்பட்டபோது அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். 

அப்போது நானும் என்னுடைய சகோதரரும் ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டோம்.  கடத்திச் சென்றவர்கள் என்னை ஒரு இருட்டறைக்குள் பூட்டி வைத்தனர். உறங்க இடமின்றி நாய் போல நான் தரையில் விழுந்தேன்.

அப்போது நான் இறப்பதுபோல நினைத்ததோடு, தனது பிள்ளைகள் குடும்பத்தாரையும் ஒருநிமிடம் நினைத்துக் கொண்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் உனக்கும் தொடர்புள்ளதாக என கேட்டு என்னை சித்திரவதை செய்தனர்.
இதற்கு 2007ம் ஆண்டு நான் பஸ் சாரதியாக கடமை புரிந்த போது புலிகள் அமைப்பு வழங்கிய பொதி ஒன்றை எடுத்துச் சென்றமையே எனக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என கூறினேன்.

இலங்கை சென்றிருந்தபோது எனக்கு நடந்ததை மறக்க முடியாது. எனக்கு நேர்ந்ததுபோல் வேறு எவருக்கும் நேரக்கூடாது. வேறு எவரும் இவ்வாறான சித்திரவதைகளை அனுபவிக்க கூடாது எனவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

தனி அறையில் வைத்து என்னை சிலர் தாக்கியதால் எனக்கு இப்போது முதுகெலும்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருட்டறைக்குள் குடிபோதையில் புகுந்த இருவர் என்மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டனர்.
நான் கடத்தப்பட்டு நான்காவது நாள் எனது உடலின் பின்பகுதியில் சூடான இரும்பினால் சூடு வைத்தனர். அப்போதே எனது வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணி அச்சப்பட்டேன்.

என்னுடைய உடலின் பின்புறத்தைப் பார்த்தால் சித்திரவதை சம்பவம் மிக அண்மையில் இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வர்.
20, 000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுத்து எனது உறவினர் (மாமா) கடத்தியவர்களிடமிருந்து என்னை மீட்டார் இவ்வாறு குமார் அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இக்குற்றச்சாட்டு பொய்யானது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குமாருக்கு அவ்வாறு துன்புறுத்தல் நடந்திருந்தால் அவர் அது குறித்து தன்னிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிப்படையான நீதித்துறை விசாரணைகளை மேற்கொள்ளும் என திசர சமரசிங்க கூறியுள்ளார்.

Monday 15 April 2013

சித்திரவதை என்பது சிறிலங்காவில் அமைப்புரீதியாக உள்ளது - ஹாங்காங் நீதிமன்றம்!

 

தமிழர்களின் உலகளாவிய எதிர்ப்புப் போராட்டத்திற்குஒரு உந்து விசையாக ஹாங்காங் மேல்நீதிமன்றம் ஒன்று இரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் சிறிலங்காவில் சித்திரவதை அமைப்புரீதியாகக் கையாளப் படுகிறது என்று உறுதி செய்துள்ளது.

அவர்கள் இருவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருவரின் பெயர்களை பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது. முள்ளிவாய்க்காலுக்கான விசாரணை இன்னமும் நடத்தப் படுவதில் தடைகள் இருந்தாலும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் குறித்தும் தமிழர்களின் போராட்டம் குறித்தும் எல்லா நாடுகளிலும் நேர்முகமான பார்வை உள்ளது.

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 19 பேரின் நிலைக்கெதிராக ஹாங்காங் சித்திரவதைக்கு இலக்காகும் வாய்ப்புள்ள அகதிகளை அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பாத சர்வதேசக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறிலங்காவில் நடத்தப் படும் சித்திரவதைகளை வருணித்த ஹாங்காங் நீதிமன்றம் மின்னதிர்ச்சியூட்டுதல் பெட்ரோல் புகை செலுத்தி மூச்சுவிடமுடியாமல் செய்தல் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்துதல் போன்றவை பல குடியரசுத் தலைவர்களின் ஆட்சியினூடாக சிறிலங்காவில் முறையாக வடிவம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்று இச்செய்தியை வெளியிட்ட 'இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்' என்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்கண்ட இருவருக்கும் மார்க் டேலி பீட்டர் பேர்ணஸ் என்ற இரு வழக்குறைஞர்கள் வழக்கு நடத்தினர். அவர்களில் பேர்ணஸ் கூறுகையில் 'இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் பாதுகாப்பு தேவைப்படும் ஒருவருக்கு நீதியை வழங்க நமது நடைமுறை உதவியிருக்கிறது இது இதைப் போன்ற மற்றையோருக்கும் உதவும்' என்றார்.

சித்திரவதை மற்றும் கொடூரத் தனமைக்கெதிரான – மனிதத் தன்மையற்ற இழிவு செய்யும் முறை அல்லது தண்டனைக்கெதிரான ஐ.நா. சாசனத்தை ஹாங்காங் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

சுவிஸில் டான் தொலைக்காட்சியை டெக் மூலம் விற்பனை செய்யும் விடுதலைப்புலிகள்


 இலங்கையில் தமிழ் ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து சிறிலங்கா அரசின் ஊடகங்களையும் சிறிலங்கா அரசின் அடிவருடி ஊடகங்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அடிவருடி ஊடகமான டான் தொலைக்காட்சி, ஈ.பி.டி.பியின் தினமுரசு, உட்பட அரச ஊடகங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து முற்றாக புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் டான் தொலைக்காட்சி போன்ற தமிழின விரோத தொலைக்காட்சிகளை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா அரசின் அடிவருடி தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியை சுவிஸில் டெக் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பே விற்பனை செய்து வருகிறது. டான் தொலைக்காட்சியை பார்க்கும் டெக்குகளை விடுதலைப்புலிகள் அமைப்பு மாவீரர்நாள் நிகழ்ச்சியின் போது விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் சுவிஸில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்படுகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Saturday 13 April 2013

உதயன் மீது ஒட்டுக்குழு அட்டகாசம்; அச்சு இயந்திரங்களும் எரிப்பு அதிகாலை சம்பவம்




யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 
உதயன் நாளிதழினை முடக்கும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் "தூஷண'' வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை ஏசியபடி, அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி வேட்டுக்களைத் தீர்த்திருக்கின்றார். 
 
அவனோடு வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி வேட்டுக்களைத் தீர்த்தனர். 
 
அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீற்றர் பிஸ்ரல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர். துப்பாக்கிதாரிகள் அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காகித றோல்களைத் தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும்பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியுள்ளனர்.
 
தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் உதயனின் குரல்வளையை நசுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டேசெல்கிறது. உதயன், மக்களின் கரங்களில் செல்வதைத் தடுக்கும் வகையில் விநியோகப் பணியை முடக்கும்செயற்பாடுகள் இந்த வருடத்தின் ஆரம்பம் முதலேமேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
கடந்த ஜனவரி 10 ஆம் நாள் உதயன் நாளிதழ் விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயம் வடமராட்சிப் பகுதியில் வைத்து விநியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்ற பத்திரிகைகளும் நடு வீதியில் வைத்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. அத்துடன் ஜனவரி 15ஆம் நாள் உதயன் ஊடகவியலாளர் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்பட்டார். 
 
இதன் தொடர்ச்சியாக யாழ். பஸ் நிலையத்தில் வைத்து உதயன் ஊடகவியலாளர் ஒருவருக்கு சீருடை தரித்த இராணுவ அதிகாரி ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
 
கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி உதயன் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்துக்குள் புகுந்துகொண்டகாடையர் குழு அங்கிருந்த பணியாளர்களைப் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. 
 
இது தவிர கடந்த காலங்களிலும் உதயன் பல சவால்களை எதிர்கொண்டிருந்தான். 2006ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் உலக ஊடக நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளை மே முதலாம் நாள் இரவில் உதயன் வளாகத்தினுள் புகுந்த காடையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். காடையர்களின் இந்தத் தாக்குதலினால் உதயன் விநியோக முகாமையாளர் மற்றும் உதயன் பணியாளர் ஒருவருமாக இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது கொல்லப்பட்டனர். 
 
அத்துடன் உதயன் ஆசிரியர் பீடத்தினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அலுவலகக் கணினி மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களையும் அழித்தனர்.
 
கடந்த 2010ஆம் ஆண்டு பெப்பிரவரிமாதம் உதயன் அலுவலகத்தின் மீது கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயன் பிரதம ஆசிரியரின் வாசஸ்தலம் மயிரிழையில் தப்பியது.
 
கடந்த ஏப்ரல் 3ஆம்திகதி கிளிநொச்சியில் உதயன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபரிடம் மேலதிக பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த போதும் இதுவரையில் அதற்குரிய எந்த விதநடவடிக்கைகளையும் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை.
 
இதேவேளை இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குத் தொடர்புகொண்டபோதும் மேலும் யாழ்.பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு உதயன் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் பொலிஸார் பதிலளிக்கவில்லை.
 
இதன் பின்னர் எமதுகொழும்பு அலுவலகத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன்சிகேராவின் கைத்தொலைபேசிக்கு அறிவித்ததன் பின்னரே பொலிஸார் உதயன் பணிமனைக்கு வருகை தந்து விசாரணைகளைமேற்கொண்டனர்.
 


 

Thursday 11 April 2013

லண்டன் சட்டத்தரணிகளின் முயற்சியால் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தம்


விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை லண்டன் சட்டத்தரணிகளின் முயற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு.என்.எச்.சி.ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங்கள் மீண்டும் விண்ணபிக்கப் போவதாகவும் யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் அதிகாரி தமது பதிலில் தெவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் கீதார்த்தனன் தெரிவித்துள்ளார்.
அந்த 19 பேருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வேறு எதாவது அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரா என்பதை தமது அமைப்பு பிரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த 19 பேரில் ஒன்பது பேர் திருப்பி அனுப்பவே முடியாத நிலையில் இருப்பதாகக் கூறும் கீதார்த்தனன், அப்படி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்றும் கூறுகிறார்.
அந்த ஒன்பது பேரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் இலங்கையிலிருந்து வெளியிருந்தார்கள் என்று அவர்களது வழக்கறிஞர் கூறுகிறார்.

ஆனால் தாங்கள் 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டதாக லோஹினி ரதிமோகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தற்போது துபாயில் தமது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ள நிலையில் இருக்கும் இவர்களில் சிலர் இறுதி யுத்த நேரத்தில் இலங்கை அரசிடம் சரணடைந்து, பின்னர் முகாம்களிலிருந்து தப்பித்து இந்தியா சென்று தஞ்சம் புகுந்திருந்தார்கள் எனவும் வழக்கறிஞர் கீதார்த்தனன் குறிப்பிட்டுள்ளார்.

Monday 8 April 2013

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்


 இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும்.

பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார்.
பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.

1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார்.

சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.

அந்த இறுதி நாட்கள்.... மதகுரு சொல்லும் உண்மைக்கதை


 முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். ]

அவர் கூறுகிறார்,

நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.

கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும். வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் ‘இயந்திரங்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.

உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது ‘பொசுபரசுக் குண்டுகள்’ வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது. இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.

ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம். அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம்.

நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது.
மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன.

நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். சவீந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம்.

மே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன. இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் “பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்” எனக் கூறினார்கள்.
அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம். ஆனால் இந்த மூன்று தடவைகளும் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், “நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்” என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர்.

அதில் நின்ற சிறிலங்கா இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், “ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்” எனக் கூறினான்.

எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் “நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்” எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம். அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர். கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது.

இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர்.
இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார்.

அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது.

“நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்” என சிரித்தவாறு கூறினார்கள்.

காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர்.

நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே “நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர்.
ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், “நாங்கள் மதகுருமார்கள்” என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம்.

கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார். நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை.

நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன. இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.

நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர்.

இதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ‘ரியூப் லைற்றுக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன்.

நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை ‘விடுதலைப் புலிகளின் முகாம்’ எனவும் ‘வலயம் 04′ எனவும் அழைத்தனர்.

எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கப் படையினர் அக்கராயன், முருகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது.
ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழில் மொழியாக்கம் – நித்தியபாரதி

Sunday 7 April 2013

துபாயில் படகில் பிடிபட்ட இளந்திரையன் குடும்பத்திற்கு சுவீடன் தஞ்சம் வழங்கியது


விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார்.

துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர் )பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர்.
தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சிங்கப்பூர் கடற்படையால் காப்பாற்றப்பட்டு துபாயில் தற்போது ய.என்.எச்.சி.ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த சனிக்கிழமை கோரியிருந்த நிலையிலே, லோகினி ரதிமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் நடத்திவந்த தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தான் பணியாற்றி வந்தவரென்றும், யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் தான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தனது கணவர் இந்தியாவில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிழைக்க வழியில்லை என்பதாலும், எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடலாம் என்பதாலும் அங்கிருந்து கிளம்பி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் படகு பழுதடைந்த வேளையில் ஐநா அகதிகள் உதவி அமைப்பை தொடர்புகொண்டபோது, சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு துபாய் வந்து சேர்ந்ததாக அவர் கூறினார்.

தான் வந்த படகில் இருந்த 46 பேரில் 39 பேரை அகதிகளாக யு.என்.எச்.சி.ஆர் அங்கீகரித்தது என்றும், ஏனையோர் 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களில் பாதியளவானோருக்கு அமெரிக்கவும் சுவீடனும் அடைக்கலம் அளித்துள்ளது ஆனால் எஞ்சியுள்ள 19 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு தான் திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தான் அஞ்சுவதாக லோகினி கூறினார். இலங்கையில் வாழும் தமது குடும்பத்தாரும் தன்னை வர வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அவர் கூறினார். 

வீரமுனையில் முஸ்லிம் கழிவுகளின் கழிவுத்தனமான செயல்


சம்மாந்துறை போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் வெட்டப்படும் மாடுகளின் கழிவுகளை வீரமுனை கிராமத்தின் வீதி ஓரங்களில் கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனர்.  வீரமுனையில் நூறு வீதம் சைவமக்கள் வாழ்கின்றனர். அயல் கிராமமான சம்மாந்துறை போன்ற முஸ்லீம்கள் வாழும் இடங்களிலேயே மாட்டிறைச்சி கடைகளும் மாடு வெட்டுபவர்களும் உள்ளனர். தினமும் வெட்டப்படும் மாடுகளின் தலைகள், தோல், குடல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து வீரமுனை கிராம வீதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.

தினமும் காலையில் எழுந்து பார்த்தால் வீதிகளில் மாட்டு கழிவுகளை தான் காணமுடிகிறது, அதனை நாய்கள் சாப்பிட்டு இழுத்துக்கொண்டு வீடுகளுக்கு வருகின்றன, காகங்கள் குடல்களையும் கழிவுகளையும் கொண்டு வந்து கிணற்றிற்குள்ளும், வீட்டு முற்றத்திலும் போடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வீரமுனை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  வீரமுனை கோவில் கிணறுகளுக்குள்ளும் காகங்கள் மாட்டு குடல்களை போடுகின்றன என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாடு வெட்டும் முஸ்லீம்கள் திட்டமிட்ட இந்த அராஜகத்தையும் அநாகரிகம் மிக்க செயலையும் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் இதனை செய்து வருகின்றனர் என வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்.  தமிழர்களை வெட்டி கொலை செய்த கொடுமைகளை செய்த முஸ்லீம்கள் இன்று மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வீரமுனை கிராமத்திற்குள் வீசிவிட்டு செல்கின்றனர்.

முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதற்கோ பன்றிகளை வெட்டுவதற்கோ குரங்குகளை வெட்டி சாப்பிடுவதற்கோ தமிழர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். நீங்கள் மாடுகளையோ குரங்குகளையோ வெட்டி தின்னுவதற்கு முதல் அதன் கழிவுகளை பக்குவமாக மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில் புதைத்து விட்டு செல்ல வேண்டும், இதை விடுத்து கழிவுகளை அடுத்த ஊருக்குள் கொண்டு சென்று வீசிவிட்டு வரும் கழிவு வேலைகளை நிறுத்த வேண்டும் என வீரமுனை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையிடம் பல முறை முறைப்பாடு செய்தும் அவர்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தினம் தினம் இந்த அராஜகம் தொடர்வதாகவும் வீரமுனை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லீம்களின் இந்த அராஜகங்களை அடக்குவதற்கு ஒட்டு மொத்த தமிழ் இனமும் விழித்தெழுவது எப்போது?

நன்றி : தினக்கதிர் 

Friday 29 March 2013

கொழும்பில் முஸ்லிம்கள் மீது சிங்களவர் இனவெறித்தாக்குதல்

 

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ பெப்பிலியான சந்தியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரபல துணிக்கடை ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 வன்முறைக் கும்பலொன்று கடையின் மீது கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியதுடன் கடை உரிமையாளர்களையும் கீழ்த்தரமாக விமர்சித்து கோசமிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பிக்குகள் தலைமையிலான கூட்டம் திடிரென்று 500 பேரளவில் அதிகரித்ததாகவும், அவர்கள் அங்கு கூடிய ஊடகவியலாளர்களையும் சுற்றிவளைத்துக் கொண்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

 வன்முறைகள் பரவமுன்னர், அங்கிருந்த பொலிசார் வன்முறையாளர்களைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். வன்முறைகள் பரவிய பின்னரே, பொலிசார் பின்னர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. 'சிறப்பு அதிரடிப் படையினரையும் காவல்துறையினரையும் மேலதிகமாக ஈடுபடுத்தி பிரதேசத்துக்கு பாதுகாப்பு' அளித்துவருவதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் புத்திக சிறிவர்தன ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

 'சில மணிநேரத்துக்குள்' நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், காதல் விவகாரம் ஒன்றினாலேயே இந்தத் துணிக்கடை மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குவந்த பின்னர், அங்கு கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களுக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. வரும் ஏப்ரல்மாத புத்தாண்டுத் தருணத்தில் மக்கள் முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்கக்கூடாது என்று கடும்போக்கு பௌத்த வாத அமைப்புகள் தொலைபேசி எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் செய்துவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Wednesday 27 March 2013

ஐ.பி.எல் . கேலிச் சித்திரம்


"கருணா முன்னிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரபா மகன்; உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" - பாலச்சந்திரன் மெய்பாதுகாவலர்


விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பாதுகாவல்களில் ஒருவர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார்.

பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர் நடந்த போது அந்த 5 பாதுகாவலர்களையும் பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்ப வைத்தார்.

அவர்களில் ஒரு பாதுகாவலர் கடந்த வாரம் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

பாலச்சந்திரன் நன்றாக படிப்பான். புத்தகம் வாசிப்பதில்தான் அவன் அதிக நேரத்தை செலவிடுவான். அவனுக்கு பெரும்பாலும் தனிமையில் இருப்பதுதான் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது.

சார்லஸ் போன்று அவனிடம் போராட்ட குணம் இருந்தது இல்லை. தலைவர் எங்களை ஈழத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பிய போது சிங்கள இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் குடும்பத்தினரின் படங்கள் இருப்பதை அறிந்தோம்.

தலைவர் குடும்பத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அவர்கள் வெறி கொண்டு அலைந்தனர். அவர்களுக்கு கருணா பக்கபலமாக இருந்தார்.
பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டபோது, அங்கு கருணா இருந்துள்ளார். அவர்தான் பாலச்சந்திரனை பிரபாகரன் மகன் என்று அடையாளம் காட்டியுள்ளார்.

அவரது கண் முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

முதலில் எங்களுக்கு இது தெரியவில்லை. ஜெனீவா நகரில் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிய போதுதான் கருணாவின் துரோகம் தெரிந்தது.

பாலச்சந்திரனுக்கு போர் பற்றி எதுவுமே தெரியாது. அப்பாவியான அந்த பாலகனுக்கு ஏதோ சாப்பிட கொடுத்து விட்டு சுட்டிருக்கிறார்கள்.
ஒரு பிஞ்சு உயிரை அருகில் நின்று சுட்டு பறித்தவர்கள் எந்த அளவுக்கு கொடியவர்களாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் தலைவர் தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் உலக மக்களின் எழுச்சி தமிழ் ஈழத்தைப் பெற துணை நிற்கும் என்றார். தற்போது அதுதான் நடக்க தொடங்கியுள்ளது.

ஈழத்தில் இருந்து வெளியேறிய நாங்கள் தற்போது ஒன்று சேர தொடங்கியுள்ளோம். முக்கிய மூத்த தலைவர்கள் பலர் உயிருடன் இருப்பது எங்களுக்கே இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

நாங்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்த போது மீண்டும் தலைவரிடம் இருந்து உத்தரவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்றனர். இப்போது நாங்கள் அந்த உத்தரவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.
இவ்வாறு அந்த விடுதலைப்புலி பாதுகாவலர் கூறினார்.

மீண்டும் இலங்கை செல்வோருக்கு பயண எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்


இலங்கை அரசாங்கம் தற்போது மேற்குலக நாடுகள் மீது தனது வலுவான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை காரணமாக, இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மேற்கத்தைய எதிர்ப்பு நிலை காரணமாக அங்கு பயணம் செய்யும் தனது நாட்டுப் பிரஜைகள் கவனமாகச் செயற்பட வேண்டுமெனவும் அது கேட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய துதுவராலயம் உட்பட ஏனைய வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரஜைகள் ஆபத்துகளை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்பட்டாலும், வேறு பல சம்பவங்கள் மூலம் அவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் அரச பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படுகிறது.
தடுத்து வைத்தல், கைது போன்றன இடம்பெறுகின்றன.

இராணுவக் கெடுபிடிகள், சோதனைச் சாவடிகளும் இலங்கையில் தாராளமாகவே காணப்படுகின்றன.

ஆயுதக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்வதாகவும் பிரித்தானியா அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Genocide of Tamils in Sri Lanka










Sunday 24 March 2013

பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7வயது தமிழ்ப்பெண் எழுந்தார்


Britain’s youngest gun-crime victim (அதாவது பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்) என்று அழைக்கப்படுபவர் துஷா கமலேஸ்வரன் ஆவார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சில் காயமடைந்த துஷாவுக்கு அப்போது வயது 5 ஆகும். வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் இரு இளைனர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி மோதலில் அந்த வர்த்தக ஸ்தாபனத்தில் தனது தாயுடன் நின்று இருந்த துசா எனும் இச்சிறுமி மீதும் எதிர்பாராத விதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிக் குண்டு பின் முதுகுவழியாக ஊடறுத்துச் சென்றதால் அவர் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டது. பல மாதங்களாக கோமா நிலையில் இருந்த துஷா பின்னர் கண் விழித்தார். அவரால் இனி வாழ்க்கையில் நடக்கவே முடியாது என்று மருத்துவர்களும் நரம்பியல் நிபுணர்களும் கூறிவிட்டனர். சக்கர வாகனத்தில் தான் இவர் செல்ல வேண்டும் என்று இவரால் எழுந்து கூட நிற்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் “யார் சொன்னது ஈழத் தமிழச்சியால் இனி எழுந்து நடக்க முடியாது” என்று? என்று கூறுவதைப் போல அவர் தன் முயற்சியை கைவிடவில்லை !
ஆம்! தற்போது துஷா எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளார். அதுவும் தன் சுய கால்களால். இது மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இனி அவர் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் 2முறை இதயத் துடிப்பு நின்று, பரா மெடிக்ஸ் உதவியோடு அவர் இதயம் மீண்டும் இயங்க வைக்கப்பட்டு பின்னர் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

பல சத்திர சிகிச்சை நடைபெற்று இறுதியில் உயிர்பிழைத்தார். உயிருடன் இருந்தாலே போதும் என்ற நிலை மாறி தற்போது அவரால் எழுந்து நிற்க்கக் கூடிய நிலை கூடத் தோன்றியுள்ளது. குறிப்பாக அவருக்கு நம்பிக்கை ஊட்டி அவரை மிகவும் ஆதரவுடன் கவனித்துக் கொள்வது, அவரது தாயார், தந்தை, சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரே என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பாரதி கூறிய நம்பிக்கை என்னும் ஒளிபடைத்த புதுமைப் பெண் இவள் தானோ ? 

 

மீன ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார். "தருமபுத்திரர் நாலிலே வனவாசம் போனது' என்பது பாடல். இதற்கு முன்பு இருந்த 3-ஆம் இடத்துக்கு "தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்பது பாடல். ஆகவே குருவைப் பொறுத்தவரை 3-ஆம் இடமும் சரி; 4-ஆம் இடமும் சரி- இரண்டு இடங்களுமே சரியில்லாத இடங்கள்தான். அப்படியானால் இந்த குருப்பெயர்ச்சி மீனராசிக்காரர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்யாதா என்ற சந்தேகம் வேண்டாம். குரு உங்கள் ராசிநாதன் என்ற பெருமையால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைக் கெடுக்கமாட்டார்.

அதேசமயம் மீனராசிக்கு 8-ல் சனியும் ராகுவும் இருப்பது குற்றம்தான். அதனால் சில சங்கடங்கள், சஞ்சலங்கள் ஏற்படலாம். என்றாலும் அவர்களை குரு பார்ப்பதால், "குரு பார்க்க கோடி தோஷம் போகும்' என்ற விதிப்படி தோஷ நிவர்த்தியாகும்.

பொதுவாக 4-ஆமிடம் குருவுக்கு மோசமான இடம்தான். குரு இயற்கையில் ஒரு சுபகிரகம். அவர் 4-ல் கேந்திரமாக இருப்பது கேந்திரதோஷம் எனப்படும். அதுமட்டுமல்ல; மீனராசிக்கு 10-க்கு உடையவர். 10-ம் ஒரு கேந்திரம். சுபகிரகமாகிய குரு கேந்திராதிபத்யம் பெறுவது கேந்திராதிபத்திய தோஷம். அதுவும் தவிர, கேந்திராதிபதி மற்றொரு 4-ஆம் இட கேந்திரத்தில் நிற்பது கேந்திர தோஷம்தான்.

ஒருவழிப்பாதையில்  (No Entry) வாகனம் ஓட்டிச்சென்றால் சட்டப் படி குற்றம்- தண்டனை உண்டு. ஆனால் அவசர நிமித்தம் உயிருக்கு மன்றாடும் ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன் போனாலும் அல்லது தீயணைக்கும் வாகனம் போனாலும் அது சட்டப் பிரச்சினை ஆகாது. அதேபோல ஒரு குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் வேன் விரட்டிப்போனாலும் குற்றமாகாது. அது விதிவிலக்கு! அதேபோல ராசிநாதன் அல்லது லக்னநாதனுக்கு எந்த தோஷமும் கிடையாது. விதி விலக்கு  உண்டு. அவர்கள் நின்ற இடம் மேன்மை யடையும்; பாதிக்காது. ராமன் சென்ற இடம் அல்லது ராமன் நின்ற இடம் அயோத்தி என்று சொல்லுவதுபோல! ஆகவே 4-ல் ராசிநாதன் குரு இருப்பதால்- 4-ஆமிடத்து தோஷம் பாதிக்காது என்பதால், அந்த பயத்தை விலக்கி தைரியம் அடையலாம்.

ஆனால் மீனராசிக்கு 2-ல் கேது நிற்பதும், 8-ல் சனியும் ராகுவும் நிற்பதும் தோஷம்தான்; குற்றம்தான். 2-ல் உள்ள கேது மீனராசிக்கு 12-ஆம் இடம், 8-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 8-ல் உள்ள ராகு மீனராசிக்கு 6-ஆம் இடம், 2-ஆம் இடம், 10-ஆம் இடங் களைப் பார்க்கிறார். ராகுவும் கேதுவும் தான் நின்ற இடத்திலிருந்து 3, 7, 11-ஆம் பார்வை பார்க்கும். அதே போல 8-ல் உள்ள சனி 10-ஆம் இடம், 2-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்க்கிறார். சனிக்கு 3, 7, 10-ஆம் பார்வை உண்டு. (ராகு- கேது எதிர்மறைப் பார்வை (ஆய்ற்ண் ஈப்ர்ஸ்ரீந்) பார்க்கும்).

இதில் குருவின் பார்வை மீனராசிக்கு 8, 11, 12-ஆம் இடங்களுக்கு கிடைப்பதால் மேற்கண்ட கேது, சனி, ராகு பார்க்கும் இடங்களான 10, 12-ஆம் இடங்களுக்கான தோஷம் விலகிவிடும். குரு 4-ல் இருப்ப தால், 4-ஆம் இடத்தை கேது பார்க்கும் தோஷமும் விதிவிலக்காகும். அதனால் 2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம்; 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், மனது, திட்டம், மகிழ்ச்சி போன்றவற்றில் மட்டும் மீனராசிக்காரர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.

ஒரு கெட்டவனோடு ஒரு நல்லவன் சேர்ந்தால்- அந்த நல்லவன் சபலம் உடையவனாகவும் சலனம் உள்ளவனாகவும் உறுதி யற்றவனாகவும் இருந்தால் நல்லவனும் கெட்டவனாக மாறிவிடுவான். லஞ்சம் வாங்கும் பல ஊழியர்களோடு வேலை பார்க்கும் ஒருவன் மட்டும் நேர்மையாக வாழமுடியாது. அவனையும் மற்றவர்கள் மாற்றிவிடுவார்கள். அல்லது அவனை எதிலாவது மாட்டி விடுவர்கள். லஞ்சம் வாங்காமல் கெட்டபெயர் எடுப்பதை விட, லஞ்சம் வாங்கியே கெட்ட பெயர் எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவான். இதுதான் சகவாச தோஷம்.

ஒரு குடிகாரகன் தன்னுடன் சேர்ந்த நல்லவனையும் குடிக்கவைத்து விடுவான். இங்கு மூன்று விதமான பலன் நடக்கலாம். ஒன்று, அந்த நல்லவன் குடிகாரனைத் திருத்தலாம். அல்லது நல்லவனும் கெட்டுப் போய் அவனோடு சேர்ந்து குடிக்கலாம். முடியாத பட்சத்தில் எக்கேடோ கெட்டுப்போய் தொலையட்டும் என்று, குடிகாரனைவிட்டு நல்லவன் ஒதுங்கி விடலாம்.

இந்த உதாரணக் கணக்குப்படி குரு நல்லவர் என்பதோடு ராசிநாதன் என்ற தன்மையால், ராகு, கேது, சனியும் நல்லவர்களாகி விடுவார்கள். அவர்கள் பார்க்கும் இடங்களையும் கெடுக்காமல் விட்டு விடுவார்கள்.

குரு 4-ல் நிற்கிறார். 4-ஆம் இடம் தாய், தன் சுகம், கல்வி, வீடு, வாகனம், பூமி ஆகிய அம்சங்களைக் குறிக்கும். ராசிநாதனே அங்கு இருப்பதால் இவை யாவும் அனுகூலப் பலன்களாக நடக்கும். மேற் படிப்பு யோகம், பாடத்தில் அரியர்ஸ் இருந்தால் அவற்றை எழுதி பாஸ் செய்வது, அட்டமத்துச் சனி நடப்பதால் வெளிநாடு போய் படிக்கும் யோகம், பிளாட் வாங்குவது, கட்டடம் கட்டுவது, புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது போன்ற பலன்கள் உண்டாகும். அட்டமத்துச் சனி தொடங்கி ஓராண்டுக்குமேல் ஆகிறது. கடந்த ஓராண்டாக உடல் நலக் குறைவு, தேவையற்ற வைத்தியச் செலவு, ஆஸ்பத்திரி அலைச்சல் என்று அவதிப்பட்டவர்களுக்கு இனி மாறுதலும் ஆறுதலும் உண்டாகும். முழு அளவில் ஆரோக்கியம் ஏற்படும். உங்களுக்கோ குடும்பத்தினருக்கோ இனி சுகம் உண்டாகும். அதேபோல தாயாருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி, கழுத்து வலி அல்லது நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்ட நிலை மாறிவிடும். சிலருக்கு டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டாகும். வங்கிக் கடன் வாங்கி புதிய வாகனம் வாங்கலாம். சிலர் பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்கலாம். சிலர் ஏற்கெனவே சிறிய கார் இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பயணம் போகும்படி சுமோ, ஸ்கார்ப்பியோ, இன்னொவா போன்ற பெரிய கார்கள் வாங்கலாம். ஒரு சிலர் தொழில் அடிப்படையில் "டி-ஃபோர்டு' வாகனம் வாங்கி பிசினஸ் செய்யலாம்.

கடந்த காலத்தில் சனி கன்னியில் இருந்தபோது 4-ஆம் இடத்தைப் பார்த்ததால், 4-க்கு 6-ல் ராகுவும் இருந்ததால், தாய்க்கும் உங்களுக்கும் ஆகாத காலமாக இருந்தது. என்னதான் தாய் தெய்வத்துக்கு சமமானவர் என்றாலும், உங்கள் கிரக அமைப்புப்படி தாயே உங்களுக்கு வேண்டாதவராக மாறியதும் உண்டு. நீங்கள் எவ்வளவு பந்த பாசத் தோடு தாயைப் பரிபாலனம் செய்தாலும், அந்த அம்மாளுக்கு உங்கள்மேல் மனத் திருப்தியும் மன நிறைவும் ஏற்பட்டிருக்காது. மகள் மீதுதான் அளவு கடந்த பாசமாகி நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுப்பார்.  அல்லது ரகசியமாக சேர்த்து வைத்த சிறுவாடு சேமிப்பு களையெல்லாம் உங்கள் கஷ்டத்துக்குக்கூட கொடுத்து உதவாமல் மகளுக்கே கொடுத்திருக்கலாம். அல்லது மூத்த மகனுக்கு கொடுத்திருக்க லாம். அதாவது நீங்கள் வளர்க்கும் கோழி- அடுத்த வீட்டில் போய் முட்டையிட்டு வந்துவிடும்.

இந்த குருபெயர்ச்சிக்குப் பிறகு அந்தநிலை மாறிவிடும். இருக்கும்வரை பிடுங்கிக்கொண்ட மகள் எதுவும் இல்லையென்றதும் தாயைக் கழற்றிவிடவும், தாய்க்கு இனிமேல்தான் மகன்மேல் பாசம் திரும்பும். நீங்களும் தாயின் நடவடிக்கையை எண்ணி ஆத்திரப் படாமல்- வெறுப்பு அடையாமல் அம்மாவை அரவணைத்து ஆதரவு காட்டவேண்டியது உங்கள் கடமை. யாராக இருந்தாலும் ஒரு மகனானவன் குடியிருந்த கோவிலை இடிக்கக்கூடாது. இறுதிக் கடமைகளை செய்யாமல் ஒதுக்கக்கூடாது. தந்தைக்கு  ஈமக்கடன் செய்யாவிட்டாலும் தோஷமில்லை. பெற்ற தாய்க்கு கண்டிப்பாக கருமக் கிரியை செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மூன்று தலைமுறைக்கு அந்தப்பாவம் வாரிசுகளையும் தாக்கும். பட்டினத் தாரும் ஆதிசங்கரரும் துறவு பூண்டாலும்கூட, தாயின் அந்திமக் காலத்தில் தேடிவந்து, குடியிருந்த கோவிலுக்கு செய்யவேண்டிய கர்மாவைச் செய்து புண்ணியம் தேடினார்கள்.

இப்போது மிதுனராசிக்கு வந்துள்ள குரு 5-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதில் 8-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் பார்ப்பது நன்மையில்லை. ஆனால் 10-ஆம் இடத்தை 10-க்குடையவரே பார்ப்பது மிகமிகச் சிறப்பு- நன்மையே!

தொழில் துறையில் போட்டி, பொறாமைகள் குறுக்கிட்டாலும், கூட இருந்தே குழிபறிக்கும் நம்பிக்கை துரோகிகள் இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது; பங்கமும் வராது; குறையும் வராது! "கெடுவார் கேடு நினைப்பார்' என்ற விதிப்படி உங்களைக் கெடுக்க நினைக்கிறவர்கள் கெட்டுப்போய் விடுவார்கள். அதனால் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள்; முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, உங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த உங்கள் உதவியாளர்கள், காலப்போக்கில் தகுதி யில்லாதவர்கள் என்று வெளியேற்றப் படுவார்கள். அதன்பிறகுதான் உங்கள் மேலிடத்தில் உங்களுக்கு செல்வாக்கு உண்டாகும். அசல் எது- போலி எது என்று தெரிவதற்கும் நேரம் காலம் தேவைப்படும். வீதியில் தொலைத்துவிட்ட பணப்பையை யாரோ ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டால், உடனே போய் வாங்கிவிட முடியாது. நீங்கள் தான் பைக்கு உரிமையானவர் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்த பிறகு தான் பெற்றுக் கொள்ள இயலும்.

8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால், குடும்பத்தில் அர்த்த மில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், உங்கள் மனம் ஆணையிடுவதுபோல செயல்படுங்கள். "போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் வரினும் எதிர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று கவியரசு கண்ணதாசன் கூறியபடி உங்கள் போக்கில் போய்க்கொண்டே இருப்பீர்கள்.

சிலருக்கு ஊர்மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். மீனராசிக்கு அட்டமச்சனி நடக்கும்போது, குடும்பத்தில் இருவருக்கு ராகு அல்லது கேது தசையோ புக்தியோ நடந்தால்- தாய், தந்தை, குழந்தை என்று சேர்ந்துவாழ முடியாது. யாராவது ஒருவர் வெளிநாடு போகும் யோகம் உண்டாகும். 2014- டிசம்பர் வரை தற்காலிகப் பிரிவாக வெளியூர் அல்லது வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். அது உத்தியோகப் பிரிவாகவும் அமையலாம். சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், அந்தப் பிரிவு  வருத்தமான பிரிவாகவும் இருக்கலாம். அப்படியிருந் தாலோ ராகு- கேது தசாபுக்தி நடந்தாலோ சூலினி துர்க்கா ஹோமம் செய்துகொள்ள வேண்டும். சந்திர தசாபுக்தி நடந்தால் ருத்ர ஹோமம் செய்து சிவலிங்கத்துக்கும் அம்பாளுக்கும் திங்கள்கிழமை ருத்ர ஹோமம் செய்ய வேண்டும். அத்துடன் திங்கள்கிழமை தோறும் தொடர்ந்து சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். சிவகங்கையில் சந்திரன் சாபவிமோசனம் பெற்ற சசி வர்ணேசுவரர் கோவில் சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகில் திங்களூர் சென்றும் சிவனுக்கு அபிஷேகம், பூஜைசெய்யலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம் செய்வார். செவ்வாய் மீனராசிக்கு 2, 9-க்குடையவர். குரு 1, 10-க்குடையவர். 9-க்குடையவர் சாரத்தில் 10-க்குடையவர் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே எல்லா வகையிலும் உங்களுக்கு யோகமான காலமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தனவரவு, வரவேண்டிய பாக்கிசாக்கி வசூல் ஆவது. குறிப்பாக அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய பணம் வந்து சேருவது போன்ற அனுகூலம், ஆதாயம், லாபம் உண்டாகும். பாக்கியம் பெருகும். குடும்பத்துக்கு தேவைப்பட்ட ஆடம்பரப்பொருள் சேர்க்கையும், அத்தியாவசியமான பொருள் சேர்க்கையும் உண்டாகும். உங்கள் மனதை ஈர்க்கும் சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். அதில் 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாகவும்; பிறகு 26-1-2014 முதல் 13-4-2014 வரை வக்ரகதியாக இரண்டாவது கட்டமாகவும் குரு சஞ்சாரம் செய்வார். ராகு மீனராசிக்கு 8-ல் இருப்பதால், முதல் கட்டத்தில் குரு பார்வையால் நல்ல மாற்றங்களாக நடக்கும். வீடு, வேலை, உத்தியோகம் இவற்றில் விரும்பிய மாற்றமும் இடப்பெயர்ச்சியும் உண்டாகும். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் லாப விரயம் அல்லது பரிவர்த்தனை யோகம் அமையும். அட்டமச்சனியோடு ராகு சம்பந்தம் என்பதால், நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலில் வழிபாடு செய்யலாம். சேந்தமங்கலம் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன், செல் 93454 38950-ல் தொடர்பு கொள்ளலாம். திண்டிவனம் அருகில் திருவக்கரை சென்று வழிபடலாம். முடிந்தால் அபிஷேக பூஜை செய்யலாம்.

இரண்டாவது கட்டத்தில் (வக்ரகதியில்) தேவையற்ற மனக்குழப்பம், குடும்பத்தில் அமைதிக்குறைவு, உடல்நலத் தொந்தரவு, தவிர்க்க முடியாத வைத்தியச் செலவு, முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம், தடை, தாமதம் ஆகிய பலன்களை சந்திக்கக் கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சூலினிதுர்கா ஹோமம் செய்யலாம். மாயவரம்- பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று, பிராகாரத்தில் உள்ள 12 நாகர் சிலை களுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ராகு- கேது சிலை இருக்கிறது. அதற்கு அபிஷேக பூஜை செய்யலாம். கோவை மருதமலை சென்று பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதியை வழிபடலாம்.

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். இதிலும் குரு இரண்டு கட்டமாக சஞ்சரிப்பார். 28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்ட மாகவும்; பிறகு 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்ட மாகவும் குரு சஞ்சாரம் செய்வார். இந்த இரண்டு கட்டத்திலும் குரு உங்களுக்குப் பரிபூரணமான யோகத்தையும் நன்மைகளையும் தருவார். பாரம்பரிமான பேரும் புகழும் உண்டாகும். கௌரவப் பட்டம், பாராட்டு, மரியாதை, அந்தஸ்து உண்டாகும். எல்லோரும் உங்களை வணங்கத்தக்க அளவு உயர்வும் பெருமையும் ஏற்படும். புதிய தொழில் யோகம், குடும்ப வாழ்க்கையில் மேன்மை, அளப்பரிய சாதனை, குடும்பத்தாரின் அன்பு, ஆதரவு, ஒத்துழைப்பு, ஆனந்தம் உண்டாகும். தேக சுகத்தில் தெளிவும் முன்னேற்றமும் ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். கட்டட சீர்திருத்தம், புதிய வீடு, மனை யோகம் ஏற்படும். சிலர் கடல்கடந்து போய்வரும் யோகமும் அமையும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

ராசிநாதனும் 10-க்குடையவருமான குரு 4-ல் அஸ்தமனம் என்பதால் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்.  தொழில் துறையிலும் அல்லது உத்தியோகத்திலும் போட்டி, பொறாமை, பிரச்சினைகள், எதிர்ப்பு, இடையூறுகளை சந்திக்க நேரும். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றங்களும் வரும். வாகனம் சம்பந்தமான பராமரிப்பு செலவுகளும் ஏற்படலாம். ஒருசிலருக்கு சிறு விபத்துகள் நேரலாம். அப்படிப்பட்டவர்கள் சென்னையை அடுத்துள்ள பாடி (திருவலிதாயம்) சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில் திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்டோர் தரிசித்து பாடியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்லலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

வக்ரத்தில் உக்ரபலம் என்பதால், இக்காலம் முழுவதும் உங்களுக்கு யோகமான காலம்; நன்மையான காலம். பட்டம், பதவி, பாராட்டு கிடைக்கும். தொழில் உயர்வு, சம்பாத்திய மேன்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் நிறைவு, நிம்மதி ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் உண்டாகும். வாகன யோகம் அமையும். புதிய வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். மாணவர்களுக்கு மேற்படிப்பு யோகம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி அற்புத யோகங்களையும் நற்பலன்களையும் தரக்கூடும். எதிர்பார்த்த காரியங்களில் இனிய வெற்றியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். குருவின் நட்சத்திரம் பூரட்டாதி என்பதால், செல்வாக்கும் பெருமையும் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, உத்தியோக உயர்வு, சம்பாத்தியம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி 8-ல் இருந்தாலும் குரு பார்ப்பதால்- குடியிருப்பு மாற்றம் அல்லது சீர்திருத்தம் அல்லது கட்டட விருத்தி ஏற்படும். உபதொழில் யோகம் அமையும். தனப் பெருக்கம் உண்டாகும். வயதானவர்களுக்கு பேரன் பேத்தி யோகம்- இளம் வயதினருக்கு திருமண யோகம் கூடும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:

ரேவதி புதன் நட்சத்திரம். புதன் 4, 7-க்குடையவர். புதன் வீட்டில்தான் குரு அமர்ந்துள்ளார். இந்த குருப்பெயர்ச்சியால் தேக ஆரோக்கியத்தில் தெளிவு, முன்னேற்றம் உண்டாகும். திருமணம், புத்திர பாக்கியம், பூமி, மனை, வீடு யோகம், சொந்தவீடு கனவு நனவாகுதல் போன்ற மங்கள நிகழ்வுகள் உண்டாகும்.