Monday 15 April 2013

சித்திரவதை என்பது சிறிலங்காவில் அமைப்புரீதியாக உள்ளது - ஹாங்காங் நீதிமன்றம்!

 

தமிழர்களின் உலகளாவிய எதிர்ப்புப் போராட்டத்திற்குஒரு உந்து விசையாக ஹாங்காங் மேல்நீதிமன்றம் ஒன்று இரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் சிறிலங்காவில் சித்திரவதை அமைப்புரீதியாகக் கையாளப் படுகிறது என்று உறுதி செய்துள்ளது.

அவர்கள் இருவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருவரின் பெயர்களை பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது. முள்ளிவாய்க்காலுக்கான விசாரணை இன்னமும் நடத்தப் படுவதில் தடைகள் இருந்தாலும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் குறித்தும் தமிழர்களின் போராட்டம் குறித்தும் எல்லா நாடுகளிலும் நேர்முகமான பார்வை உள்ளது.

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 19 பேரின் நிலைக்கெதிராக ஹாங்காங் சித்திரவதைக்கு இலக்காகும் வாய்ப்புள்ள அகதிகளை அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பாத சர்வதேசக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறிலங்காவில் நடத்தப் படும் சித்திரவதைகளை வருணித்த ஹாங்காங் நீதிமன்றம் மின்னதிர்ச்சியூட்டுதல் பெட்ரோல் புகை செலுத்தி மூச்சுவிடமுடியாமல் செய்தல் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்துதல் போன்றவை பல குடியரசுத் தலைவர்களின் ஆட்சியினூடாக சிறிலங்காவில் முறையாக வடிவம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்று இச்செய்தியை வெளியிட்ட 'இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்' என்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்கண்ட இருவருக்கும் மார்க் டேலி பீட்டர் பேர்ணஸ் என்ற இரு வழக்குறைஞர்கள் வழக்கு நடத்தினர். அவர்களில் பேர்ணஸ் கூறுகையில் 'இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் பாதுகாப்பு தேவைப்படும் ஒருவருக்கு நீதியை வழங்க நமது நடைமுறை உதவியிருக்கிறது இது இதைப் போன்ற மற்றையோருக்கும் உதவும்' என்றார்.

சித்திரவதை மற்றும் கொடூரத் தனமைக்கெதிரான – மனிதத் தன்மையற்ற இழிவு செய்யும் முறை அல்லது தண்டனைக்கெதிரான ஐ.நா. சாசனத்தை ஹாங்காங் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment