Monday 4 March 2013

இலங்கை தமிழருக்கு நீதி வேண்டி தமிழகத்தில் இளைஞர் தீக்குளிப்பு


சிறிலங்காவின் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவருமான இல.மணி இன்று நண்பகல் தீக்குளித்து கடுமையான காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்றிரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார்.

கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு சமூக ஆர்வலரான தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார்.  உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோர் தீயை அணைத்து மிகவும் ஆபத்தான நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அத்துடன், ‘இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என தீக்குளித்த நபர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment