Tuesday 5 March 2013

பூனைக்காக கணவனைக் கொன்ற மனைவி


சைபீரியா நாட்டைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் பூனைக்காக தனது கணவனைக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடககங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த தம்பதியினர் கடந்த மாதம் 10ஆம் திகதி மாலை இரவு மது அருந்திக்கொண்டிருக்கொண்டிருந்துள்ளனர். அப்போது கொலை செய்யப்பட்ட நபர், மனைவியின் வளர்ப்புப் பூனையை தாக்க முற்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமைந்த குறித்த பெண் தனது பூனையைக் காப்பாற்றுவதற்காக மேசையிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவரது கணவனை நெஞ்சில் 3 முறை குத்தியுள்ளார். தொடர்ந்து கணவன் சம்பவ இடத்திலேயே மரமடைந்துள்ளார். தற்போது இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனைக்கா கணவனைத் தாக்கிய சம்பவமொன்று கடந்த வருடம் செப்டம்பர் மாதமளவில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்மாடியோவ் பூனைக்கேவா....... கொலை!

No comments:

Post a Comment