Wednesday 6 March 2013

மதுரையில் அமைந்துள்ள இலங்கை விமான நிறுவனம் அடித்து நொருக்கப்பட்டது


இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் நாட்டில் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், இலங்கை விமான நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நேற்று சுப்பிரமணிய சுவாமி அலுவலகம் தாக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் திடீரென ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். ரயில் நிலையம் நோக்கி முன்னேறிய அவர்களை பொலிஸார் கைது செய்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை விமான நிறுவனமான 'மிஹின் லங்கா' நிறுவனக அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment