Friday 8 March 2013

யாழ். வலம்புரி ஊடகவியலாளர் மீது படைப் புலனாய்வினர் தாக்குதல்


யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும்  வலம்புரி  பத்திரிகையி ன் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உ.சாளின் (வயது22) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது குறித்த பத்திரிகையாளர் யாழ்.நீராவியடி வீதி வழியாக அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது வீதிதியில் நின்று வழிமறித்த 6பேர் கொண்ட குழு கடுமையாக தாக்கியுள்ள து. மேலும் அருகில் கட்டிடவேலையில் நின்றிருந்தவர்களிடமிருந்து மண்வெட்டியொன்றினை எடுத்து மண்வெட்டியாலும் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த பத்திரிகையளார் யாழ்.பல்கலைக்கழத்தில் அசம்பாவிதம் இடம்பெறும் போதும் இராணுவத்தினரால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று இவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடுமையான உள்காயங்களுக்குள்ளாகி, மூச்சுத்திறணல் ஏற்பட்டு வீதியில் கிடந்த நிலையில் வீதியால் வந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இவரைத் தாக்கியவர்களிடம் தன்னுடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையினை காண்பித்திருக்கின்றார். அதற்கு தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக் கொண்டே தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment