நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடுகடத்துவதற்கான முயற்சிகளை அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு சபை மேற்கொண்டு வருகிறது.
அதன் பேச்சாளர் ஓருவரின் தகவல்படி இலங்கை
அகதிகளை மீண்டும் நாடுகடத்துவதற்கான அனுமதி கோரி, மீண்டும் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 69 அகதிகள் வரையில் இவ்வாறு கடந்த வியாழக்கிழமை நாடுகடத்தப்படவிருந்தனர்.
எனினும் இங்கிலாந்தின் உயர் நீதிமன்றம் இலங்கையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றமையை காரணம் காட்டி, அவர்களை நாடுகடத்தும் தீர்மானத்தை ஒத்திவைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு அனைத்து அதிகளையும் நிரந்தரமாக பிரித்தானியாவில் தங்க வைப்பதற்காக இல்லை என்று தெரிவித்துள்ள சபையின் பேச்சாளர் மீண்டும் அவர்களை நாடுகடத்த நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுமார் 69 அகதிகள் வரையில் இவ்வாறு கடந்த வியாழக்கிழமை நாடுகடத்தப்படவிருந்தனர்.
எனினும் இங்கிலாந்தின் உயர் நீதிமன்றம் இலங்கையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றமையை காரணம் காட்டி, அவர்களை நாடுகடத்தும் தீர்மானத்தை ஒத்திவைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு அனைத்து அதிகளையும் நிரந்தரமாக பிரித்தானியாவில் தங்க வைப்பதற்காக இல்லை என்று தெரிவித்துள்ள சபையின் பேச்சாளர் மீண்டும் அவர்களை நாடுகடத்த நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment